லக்னோ: இந்து மத புத்தகங்களை மாணவர்கள் வாங்கி படிக்க சுற்றறிக்கை மூலம் உத்தரவிட்ட மீரட் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கடும் கண்டனம் வலுத்து வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகமாக சவுத்தரி சரண் சிங் பல்கலைக் கழகம், மீரட் பல்கலை கழகம் என அறியப்படுகிறது, பல்கலைக் கழகத்தின் கீழ், 8 மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு கல்லூரிகள் மற்றும் தனியார் கல்வி நிறுவனகள் செயல்பட்டுவருகின்றன. இந்நிலையில் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரான சங்கீதா சுக்லா, சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார்.