மழையால் சேறும், சகதியுமாக மாறிய தாவரவியல் பூங்கா புல் மைதானங்கள்-சுற்றுலா பயணிகள் அவதி

ஊட்டி : தொடர் மழையால் சேறும் சகதியுமாக மாறியது தாவரவியல் பூங்கா புல்  மைதானங்கள் மாறியதால் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகினர். நீலகிரி  மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு  பருவமழை பெய்யும். அதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் துவங்கி இரு மாதங்கள்  வடகிழக்கு பருவமழை பெய்யும். அதன்பின் 6 மாதங்களுக்கு மழை பெய்யது.  குறிப்பாக, மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை மழை பெய்யாது. இச்சமயங்களில்  சமவெளிப் பகுதிகள் போன்று இங்கும் வெயலின் தாக்கம் சற்று அதிகமாக  காணப்படும்.

ஆனால், இந்த ஆண்டு யாரும் எதிர்பார்க்காத நிலையில், கடந்த 15  நாட்களுக்கு மேலாக ஊட்டியில் நாள்தோறும் மழை பெய்து வருகிறது.  இந்நிலையில், கடந்த 20ம் தேதி ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி  துவங்கியது. மலர் கண்காட்சி துவங்கிய நாள் முதலே நாள் தோறும் மழை பெய்து  வருகிறது.  மழை காரணமாக தாவரவியல் பூங்காவில் உள்ள புல் மைதானங்கள்  அனைத்தும் சேறும் சகதியுமாக மாறியுள்ளன. இதனால்,  சுற்றுலா பயணிகள் கடும்  அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Related Stories: