ஊட்டி : தொடர் மழையால் சேறும் சகதியுமாக மாறியது தாவரவியல் பூங்கா புல் மைதானங்கள் மாறியதால் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகினர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். அதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் வடகிழக்கு பருவமழை பெய்யும். அதன்பின் 6 மாதங்களுக்கு மழை பெய்யது. குறிப்பாக, மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை மழை பெய்யாது. இச்சமயங்களில் சமவெளிப் பகுதிகள் போன்று இங்கும் வெயலின் தாக்கம் சற்று அதிகமாக காணப்படும்.