தரங்கம்பாடி பகுதியில் குறுவை சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்

தரங்கம்பாடி : மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பகுதியில் குறுவை சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.தரங்கம்பாடி பகுதியில் குறுவை சாகுபடியில் விவசாயிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். பாய் நாற்றங்கால் விடுதல், நிலங்களை உழுதல், அண்டை வெட்டுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். புதிய ரகமான ஆடுதுறை 53 நெல் அதிக மகசூலை அளிப்பதால் விவசாயிகள் அதிக அளவில் அந்த விதை நெல்லை பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் கோ 51, ஆடுதுறை 36, ஆடுதுறை 45, ஆடுதுறை 43, அம்பாசமுத்திரம் 16 உள்ளிட்ட விதை நெல்லையும் குறுவை சாகுபடிக்கு பயன்படுத்தி வருகின்றனர். குறுவை சாகுபடிக்கு தேவையான உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகளை தடை இன்றி கிடைக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

Related Stories: