தரங்கம்பாடி : மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பகுதியில் குறுவை சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.தரங்கம்பாடி பகுதியில் குறுவை சாகுபடியில் விவசாயிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். பாய் நாற்றங்கால் விடுதல், நிலங்களை உழுதல், அண்டை வெட்டுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். புதிய ரகமான ஆடுதுறை 53 நெல் அதிக மகசூலை அளிப்பதால் விவசாயிகள் அதிக அளவில் அந்த விதை நெல்லை பயன்படுத்தி வருகின்றனர்.