புதுக்கோட்டை: திருமயம் பகுதியில் உள்ள வீரகாளியம்மன் கோயிலில் கிடா வெட்டு நடத்த அனுமதி தருவது தொடர்பான வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு விடப்பட்டுள்ளது. கிடா வெட்டு விழா தொடர்பாக பேச்சுவார்த்தை குழு அமைத்து நடவடிக்கை எடுக்க தாசில்தாருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு அளித்துள்ளது. புதுக்கோட்டையை சேந்த அழகப்பன் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற கிளை நீதிபதி தமிழ்செல்வி உத்தரவு பிறப்பித்துள்ளார்.