சில்லி பாய்ன்ட்...

* பிரெஞ்ச் ஓபனில் பட்டம் வெல்லும் வாய்ப்பில் இருந்த துனிசியா வீராங்கனை ஆன்ஸ் ஜெபர் முதல் சுற்றிலேயே தோற்றார்.

* அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பை கலைத்து விட்டு உச்ச நீதிமன்றம் ‘நிர்வாகிகள் குழு’வை நியமித்துள்ளது. அது குறித்து ஆராய  உலக(பிபா), ஆசிய(ஏஎப்சி) கால்பந்து கூட்டமைப்புகளின் கூட்டுக்குழு இந்தியா வர உள்ளது.

* முதல்முறையாக தாமஸ் கோப்பையை வென்று சாதனை படைத்த இந்திய அணி வீரர்கள் நேற்று பிரதமர் மோடியை சந்தித்தனர்.

* பிரெஞ்ச் ஓபன் இறுதிப்போட்டிக்கு 2முறை முன்னேறிய ஆஸ்திரிய வீரர் டொமினிக் தியம் முதல் சுற்றிலேயே வீழ்ந்தார்.

Related Stories: