மும்பை:15வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, புனே நகரில் நடைபெற்றது. இதில் பங்கேற்று ஆடிய 10 அணிகளில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் நாளை மறுதினம் (24ம்தேதி) நடைபெறும் முதல் குவாலிபயர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிபோட்டிக்கு முன்னேறும்.