தென்காசி: குற்றாலத்தில் விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது. அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுவதால் வரிசை இல்லாமல் குளித்து மகிழ்ந்தனர். குற்றாலத்தில் இந்தாண்டு வழக்கத்தைவிட 15 நாட்கள் முன்னதாக மே மாதத்தின் 2வது வாரத்திலேயே சீசன் தொடங்கியது. அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. நேற்று பகலில் வெயிலும், சாரலும் மாறி மாறி காணப்பட்டது. பெரும்பாலான நேரம் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. மெயினருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் பரந்து விழுகிறது. ஐந்தருவியில் 5 பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி ஆகியவற்றிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது. அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுவதால் அனைத்து அருவிகளிலும் வரிசை இல்லாமல் குளித்து மகிழ்ந்தனர்.