விருதுநகர் அருகே எண்ணெய் ஆலையில் தீ விபத்து

விருதுநகர்: விருதுநகர் எண்ணெய் தயாரிப்பு ஆலையில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. விருதுநகர்-மல்லாங்கிணர் ரோட்டில் முத்துராமன்பட்டியைச் சேர்ந்த குப்பண்ணசாமிக்கு சொந்தமான எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. இங்கு தேங்காய் மற்றும் முந்திரி எண்ெணய் மற்றும் புண்ணாக்கு தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு 7.30 மணிக்கு குப்பண்ணசாமி, ஆலையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். அதன்பின், 7.45 மணியளவில் ஆலையின் உள்புறத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதன்பின், தீயின் அளவு அதிகரித்து சுமார் 60 அடிக்கு தீ கொளுத்து ஏரிந்துள்ளது.

தகவலறிந்து 4 வாகனங்களில் வந்த விருதுநகர் தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், தீயை அணைக்க முடியவில்ைல. இந்த விபத்தில் ஆலையின் உள்ளே இருந்த ரூ.15 லட்சம் மதிப்பிலான எண்ணெய் தயாரிப்பு மிஷின்களும், ரூ.35 லட்சம் மதிப்பிலான எண்ணெய் இருப்புகளும் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எஸ்பி மனோகர், டிஎஸ்பி அர்ச்சனா விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் ரூரல் ேபாலீசார், தீ விபத்தால் மேலும் பாதிப்புகள் ஏற்படாதவாறு இருக்க, அப்பகுதியில் போக்குவரத்தை தடை செய்தனர்.

Related Stories: