நெல்லை: நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். அம்பா சமுத்திரம் வனகோட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழையால் அருவியில் நீர்வரத்து அதிகமாக இருந்தது. தற்போது நீர்வரத்து குறைந்துள்ள நிலையில் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.