சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று கிண்டி கிங் இன்ஸ்ட்டியூட் வளாகத்தில் உள்ள தேசிய முதியோர் நல மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்மற்றும் அதிகாரிகள்பங்கேற்றனர். பின்னார் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் உள்ள ஒரு குடும்பத்தில் 2 பேருக்கு புதிய வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில் ஒருவருக்கு புதிய வகை வைரஸ் பிஏ-4 வகையான வைரஸ் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டிருக்கிறது. அவர் தற்போது நலமாக பாதுகாப்பாக இருக்கிறார். அவரோடு தொடர்புடையவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஒரே நேரத்தில் ஆயிரம் பணிமாறுதல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.