செங்கல்பட்டு: கலெக்டர் ராகுல் நாத் விடுத்துள்ள அறிக்கை: கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 23ம் தேதி காலை 10.00 மணியளவில் காணொலி காட்சி மூலம் துவக்கி வைக்க உள்ளார். எனவே, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் அந்தந்த கிராம பஞ்சாயத்துக்களில் தவறாது கலந்து கொள்ள வேண்டும். இம்மாவட்டத்தில் 8 வட்டாரங்களில் உள்ள பெரும்பாக்கம், வேடந்தாங்கல், தின்னலூர், வெள்ளபுத்தூர், கரிக்கிலி, வடமணிப்பாக்கம், மொரப்பாக்கம், கிளியாநகர், சூனாம்பேடு, சித்தாற்காடு, நெற்குணம், போந்தூர், மேலமையூர், ஆலப்பாக்கம், திம்மாவரம், ஊரப்பாக்கம், வல்லம், வண்டலூர், செய்யூர், கடலூர், முகையூர், நெடுமரம், நெல்வாய்பாளையம், வையாவூர், கிணார், முன்னூத்திகுப்பம், அண்டவாக்கம், காவாத்தூர், மாமண்டூர், சிலாவட்டம், புக்கத்துறை, விட்டிலாபுரம், சதுரங்கப்பட்டினம், புதுப்பட்டினம், வாயலூர், உட்பட 55 கிராம பஞ்சாயத்துகள் 2021-2022-ம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்டு இத்திட்டம் செயல்படுத்த முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.