பாட்னா: பீகாரில் ஒரே நாளில் மின்னல் தாக்கி 33 பலியாகினர். பீகாரில் நேற்று முன்தினம் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது, இங்குள்ள 38 மாவட்டங்களில் 16 மாவட்டங்களில் மின்னல் தாக்கி 33 பேர் பரிதாபமாக பலியாகினர். இவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடியும், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து, நிதியுதவியும் அறிவித்துள்ளனர். அதிகபட்சமாக பாகல்பூரில் 7 பேரும், முசாபர்பூரில் 6 பேரும் இறந்துள்ளனர்.