29 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை தமிழகத்தில் 46 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று குறைவதும், அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது. அதன்படி 18ம் தேதி 34 பேருக்கும், 19ம் தேதி 36 பேருக்கும், 20ம் தேதி 42 பேருக்கும், நேற்று முன்தினம் 37 பேருக்கும், நேற்று 46 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 14,352 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 46 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. வீட்டுத் தனிமை மற்றும் மருத்துவமனையில் 321 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று சிகிச்சை பெற்று வந்த 40 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 34,16,501 ஆக உயர்ந்துள்ளது.நேற்று அதிகபட்சமாக சென்னையில் 25 பேருக்கும், செங்கல்பட்டில் 6 பேருக்கும், கோவை, வேலூரில் தலா 4 பேருக்கும், சேலம், திருச்சியில் தலா 2 பேருக்கும், ஈரோடு, காஞ்சிபுரம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற 29 மாவட்டங்களில் பாதிப்பு ஏதும் இல்லை.

Related Stories: