சென்னை: 2018-19ம் ஆண்டிற்கான ஏற்றுமதி சிறப்பு விருதுகள் செஸ் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களுக்கு சென்னையில் நாளை வழங்கப்படுகிறது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: சிறப்பு பொருளாதார மண்டலம் ஒவ்வொரு ஆண்டும் ஏற்றுமதி நிறுவனங்களின் சேவையை அங்கீகரித்து அவர்களுக்கு விருதுகளை வழங்குகிறது. இவ்விருதுகள் 7 துறைகளின் கீழ் 25 வகையான ஏற்றுமதி நிறுவனங்களுக்கும் மற்றும் அபிவிருத்தி நிறுவனங்களுக்கும் வழங்கப்படுகின்றன. 2018-19ம் ஆண்டிற்கான ஏற்றுமதி சிறப்பு விருதுகள் செஸ் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களுக்கு 23ம் தேதி(நாளை) திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு மெப்ஸ் செஸ் வளாகத்தில் வழங்கப்படுகின்றன.