லண்டன்: உக்ரைனில் என்ன நடக்கிறது? லடாக்கில் என்ன நடக்கிறது? என்பது குறித்து லண்டனில் நடந்த மாநாட்டில் ராகுல்காந்தி பேசினார். ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராகவும் பல்வேறு கருத்துக்களை கூறினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, லண்டனில் நடந்த மாநாடு ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘ரஷ்யா - உக்ரைன் போரை போன்றது, இந்தியா - சீனாவுக்கும் இடையிலான போர்; உக்ரைனில் என்ன நடக்கிறது? லடாக்கில் என்ன நடக்கிறது? என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உக்ரைன் மண்ணைக் கைப்பற்ற ரஷ்யா தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதேபோல் சீனாவும் இந்திய மண்ணை கைப்பற்ற முயற்சிக்கிறது. இந்திய அரசு, இந்தப் பிரச்னையைப் பற்றி பேச விரும்பவில்லை. எந்த குழப்பமும் அங்கு நடக்கவில்லை என்கின்றனர்.