கூடலூர்: கூடலூர் அருகே மின்சாரம் தாக்கி காட்டு யானை பலியானது. நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவர்சோலை பேரூராட்சியில் தனியார் தேயிலை தோட்டம் உள்ளது. இங்குள்ள முருகன் கோயில் பகுதிக்கு நேற்று அதிகாலை 5 யானைகள் அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து தேயிலைத்தோட்டம் வழியாக வந்துள்ளன. இதில் ஒரு யானை அப்பகுதியில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்புகள் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் மின்கம்பியை துதிக்கையால் இழுத்துள்ளது. இதில், யானை மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.