கேன்ஸ்: கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்ற நடிகை பூஜா ஹெக்டேவின் சூட்கேஸ் மாயமான நிலையில், அவரது நகைகள் தப்பியதால் அவர் நிம்மதி அடைந்துள்ளார். பிரான்சில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியாவின் திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ளனர். அந்த வகையில் தெலுங்கு பட நடிகையான பூஜா ஹெக்டேவும் முதன்முறையாக இந்த விழாவில் கலந்து கொண்டார். விழாவில் அவர் தனது அசத்தலான பாணியில் ஆடைகளை அணிந்து கலக்கினார். ஆனால், அவருக்கு சோகமான சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது. ஃபிலிம் கம்பேயனுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘என்னுடைய அலங்கார ஒப்பனை பொருட்கள், உடைகள் அனைத்தையும் சூட்கேசில் வைத்திருந்தேன். கேன்ஸ் விழாவில் பங்கேற்கும் முன், எல்லா பொருட்களும் எங்களுடன் இருந்தது.