நொய்டா: நொய்டா அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 21வது மாடியில் இருந்து தனது பெண் தோழியுடன் சேர்ந்து பொறியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கவுதம் புத் நகரின் தானா பிஸ்ராக் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பொறியாளர் அஜய் குமார் (28) என்பவரும், அவரது பெண் தோழி குமாரி பிராச்சி (28) என்பவரும் வசித்து வந்தனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் 21வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டனர். தகவலறிந்த போலீசார், இருவரின் சடலங்களையும் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் கமிஷனர் அலோக் சிங்கின் ஊடகப் பொறுப்பாளர் பங்கஜ் குமார் கூறுகையில், ‘பொறியாளர் மற்றும் அவரது தோழி ஆகியோர் 21வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.