டெல்லி: இந்தியாவின் கிழக்கு லடாக் பகுதியில் சீனா பாலம் கட்டி வரும் பகுதி 60 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் அந்த நாட்டால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி என்று பாரதிய ஜனதா தலைமையிலான ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் ஏரியில் மிகப்பெரிய அளவில் ஏற்கனவே சீனா ஒரு பாலத்தை கட்டி முடிந்துவிட்டது. தற்போது அதே இடத்தில் இரண்டாவது பாலத்தையும் கட்டி எழுப்பி வருகிறது. இது புதிய பாலமா? அல்லது முதல் பாலத்தின் விரிவாக்கமா? இன்னும் தெளிவாகவில்லை. அதே நேரம் சீனா பாலம் கட்டி வரும் பகுதி இந்தியாவுக்கு சொந்தமான பகுதிதான் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.