சிகாகோவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழப்பு... 8 பேர் படுகாயம்!!

சிகாகோ :அமெரிக்காவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான சிகாகோவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயம் அடைந்தனர். சிகாகோ நகரின் மாக்னிஃபிசென்ட் மைல் ஷாப்பிங் மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் உள்ள மெக்டொனால்டு உணவகம் ஒன்றில் வாசலில் நேற்று இரவு 2 பிரிவினர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது திடீரென ஒருவர் துப்பாக்கியை எடுத்து கண்ணில்பட்டவர்களை எல்லாம் சரமாரியாக சுட்டார். இதில் குண்டு பாய்ந்து நிகழ்விடத்திலேயே 2 பேர் உயிரிழந்துவிட்டனர்.

படுகாயம் அடைந்த 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சிகாகோ காவல்துறையினர் தீவிர விசாரணைக்கு பிறகு இளைஞர் ஒருவரை கைது செய்தனர். துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடத்தில் கை துப்பாக்கி ஒன்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் பிடிபட்ட இளைஞரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட நபர் குறித்த தகவல்களை காவலர்கள் உடனடியாக வெளியிடவில்லை.

Related Stories: