பழம், காய்கறி, பால் வாங்குவதை கூட குறைத்துவிட்டதக மிடில் கிளாஸ் மக்கள் கதறல் : ப.சிதம்பரம் ட்வீட்

சென்னை : நடுத்தர மக்களும், ஏழை எளிய மக்களும் பணவீக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதை கூட குறைத்துவிட்டதாக அவர் கூறுகிறார்.

இதுகுறித்து ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒரு நடுத்தரக் குடும்பம் விலை ஏற்றத்தால் படும் பாட்டைக் கணவன்-மனைவியின் சொற்களில் கேளுங்கள். பழம், காய்கறி, பால் வாங்குவதைக் குறைத்துவிட்டோம்.

மிக முக்கியமான விசேஷம் தவிர புதுத்துணி வாங்குவதில்லை. வெளியூர் செல்வதையும், வெளியில் உண்பதையும் நிறுத்திவிட்டோம். CNG காரைப் பயன்படுத்துவது கட்டுப்படியாகவில்லை.

இன்று என்ன சமைப்பது என்பதே பெரிய பிரச்னையாகிவிட்டது. ஒவ்வொரு மாதமும் பட்ஜெட் போடுகிறோம், ஆனால் மூன்றாம் வாரத்திலேயே மூச்சு திணறுகிறது.ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தின் நிலை இதுவென்றால், ஏழைக் குடும்பங்களின் நிலை எவ்வளவு அவலமாக இருக்கும் என்று சிந்தியுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: