கொழும்பு : இலங்கை திவாலாகிவிட்டதாக அந்த நாட்டின் மத்திய வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதால் வேறு எந்த நாட்டிடமோ உலக நிதி அமைப்புகளிடமோ கடன் வாங்க முடியாத சிக்கலான நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது. இலங்கையின் கழுத்தை நெறித்து வரும் பொருளாதார நெருக்கடியால் அந்த நாடு கடனிலும் விலைவாசி உயர்விலும் பற்றாக்குறையிலும் அல்லல்லாடி வருகிறது. இந்த நிலையில் முதன்முறையாக 606 கோடி ரூபாய் கடன் தவணையை கட்ட இலங்கை தவறி உள்ளது. கடன் தொகையை செலுத்துவதற்கான சலுகை காலமான ஒரு மாத காலமும் முடிந்துள்ளதால் பொருளாதாரத்தில் இலங்கை திவாலாகிவிட்டதாக நேற்று முன்தினம் அந்த நாட்டு மத்திய வங்கி ஆளுநர் அறிவித்தார். இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் இலங்கை தங்கள் செல்வாக்கை இழக்கத் தொடங்கிவிட்டது.