பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே கோடை மழை பெய்து வருகிறது. இதனால், அவ்வப்போது மரக்கிளைகள் மின்கம்பங்கள் மீது முறிந்து விழுந்து விபத்து ஏற்பட்டு, மின் விநியோகம் தடை பெற்று வருகிறது. இதில், தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் மின் கம்பிகளில் உரசும் நிலையில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.