சென்னை: திருவொற்றியூர் சரஸ்வதி நகர் 12வது தெருவை சேர்ந்த அர்ஜூன், அதே பகுதியில் உள்ள டயர் தொழிற்சாலையில் இரவில் வேலை பார்த்து வருகிறார். பகலில் ஆன்லைன் உணவு டெலிவரி செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பணியை முடித்துவிட்டு காலையில் வீட்டிற்கு வந்த அர்ஜூன், தனது மகன் புகழ் குமரனை (6) அழைத்துக் கொண்டு, உணவு டெலிவரி செய்தார்.