செங்கல்பட்டு, மே 21: செங்கல்பட்டு மாவட்டத்தில், மீன் வளர்ப்போரை ஊக்குவிக்கும் வகையில் குளம் அமைக்க மானியம் வழங்கப்படும் என கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை. செங்கல்பட்டு மாவட்டத்தில் 2021- 2022ம் ஆண்டுக்கான பிரதம மந்திரி மட்சய சம்படா யோஜனா திட்டத்தின் கீழ் (PMMSY) மீன் வளர்ப்போரை ஊக்குவிக்கும் விதமாக, ஒரு அலகு உயிர் கூழ்ம திரள் குளம் அமைக்க மற்றும் உள்ளீட்டுக்கு ஆகும் மொத்த செலவினம் ரூ.18 லட்சத்தில், பொதுப்பிரிவினருக்கு 40 விழுக்காடு மானியம் வழங்கப்படும்.