சென்னை: பண்டிதர் அயோத்திதாசர் பிறந்தநாளில் சூழ்ச்சிகளால் பூட்டப்பட்ட அடிமை விலங்கை உடைத்து, சுயமரியாதையோடு திராவிட இனத்தின் தனித்த பண்பாட்டை காக்க உறுதியேற்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘திராவிட இயக்க முன்னோடிகளில் முதன்மையானவரான பண்டிதர் அயோத்திதாசர் பிறந்தநாளில் சூழ்ச்சிகளால் பூட்டப்பட்ட அடிமை விலங்கை உடைத்து, சுயமரியாதையோடு திராவிட இனத்தின் தனித்த பண்பாட்டைக் காக்க உறுதியேற்போம். அமையவுள்ள மணிமண்டபம் அவரது வரலாற்றில் நமது வரலாற்றை உணர்த்தும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.