புழல்: நல்லூர் ஊராட்சியில் தனியாருக்கு சொந்தமான ஐஸ்கிரீம் கம்பெனியிலிருந்து வெளியேற்றப்படும் கழிநீர், ஏரி கால்வாயில் கலக்கிறது. இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றானது சோழவரம் ஏரி. இந்த ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீர் நல்லூர் ஊராட்சி, ஆங்காடு ஊராட்சி, கும்முனூர் ஊராட்சி வழியாகதான் ஆங்காடு ஏரியில், பல ஆண்டுகளாக சென்று சேர்கிறது. இவ்வழியில், தனியாருக்கு சொந்தமான ஐஸ்கிரீம் கம்பெனி உள்ளது. இங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் கால்வாயில் விடப்படுவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசப்படுகிறது.