சென்னை: வரும் 28ம் தேதி பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. பாமகவின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் வரும் 28ம் தேதி காலை 11 மணிக்கு சென்னையை அடுத்த திருவேற்காடு ஜி.பி.என். பேலஸ் திருமண அரங்கத்தில் நடைபெறும். கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி முன்னிலையில் நடைபெறும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சி தலைவர் ஜி.கே.மணி தலைமை ஏற்கிறார். இதில் பலர் கலந்து கொள்கின்றனர்.