சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
பாஜ ஆட்சி வந்த நாள் முதல், உண்மையான வரலாறுகளை மறைத்து, மதவெறி பார்வையில் திரித்து எழுதும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புகள் எழுதிக் கொடுப்பதை வரலாறாக கற்பிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 10ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில், சமூகச் சீர்திருத்தம் என்ற தலைப்பின் கீழ் இருந்த தந்தை பெரியார், கேரளத்தின் நாராயண குரு ஆகியோரை பற்றிய குறிப்புகளை நீக்கி விட்டனர்.