சென்னை:மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 15,756 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 37 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனிடையே வீட்டுத் தனிமை மற்றும் மருத்துவமனையில் 315 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று சிகிச்சை பெற்று வந்த 44 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் கூட உயிரிழக்கவில்லை.