மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மீண்டும் விளையாடுவேன் என சிஎஸ்கே கேப்டன் தோனி கூறியுள்ளார். மும்பை பிரபோர்னே மைதானத்தில் இன்று நடைபெறும் 68-வது ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகின்றன. பிளே ஆப் வாய்ப்பில் இருந்து வெளியேறினாலும் ஆறுதல் வெற்றிக்காக சென்னை அணி களமிறங்குகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
டாஸ் வென்ற பிறகு கேப்டன் தோனி கூறுகையில்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மீண்டும் விளையாடுவேன், சென்னைக்கு நன்றி சொல்லாமல் இருப்பது நியாயமல்ல, ரசிகர்களை ஏமாற்றுவது சரியாகாது என அவர் கூறியுள்ளார்.