சிவகாசி: வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் நேற்று நடந்த அகழாய்வில் புகைபிடிப்பான் கருவி கண்டெடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை தோண்டப்பட்ட 5 குழிகளில் பல நிறங்களில் பாசி மணிகள், சுடுமண்ணாலான விளையாட்டு வட்டச்சில்லுகள், சூதுபவளம், பானை, பொம்மைகள், அகல்விளக்குகள், விலங்குகளின் எலும்புகள் ஆகியவை கிடைத்தன. சில தினங்களுக்கு முன் 6வது குழியில் நடந்த அகழாய்வில், சுடுமண்ணாலான புகைபிடிப்பான் கருவி, பானைகள் முன்னோர் பயன்படுத்தியதற்கான அடையாளமாக ஏராளமான பானை ஓடுகள் கிடைத்தன.