சேலம் அருகே ஆயுதம் தயாரிப்பில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது: நாட்டுத் துப்பாக்கிகள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

சேலம்: சேலம் அருகே ஆயுதம் தயாரிப்பில் ஈடுபட்டு வந்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞர்களிடமிருந்து நாட்டு வெடிகுண்டுகள், நாட்டுத் துப்பாக்கிகள், கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சேலம் ஏற்காடு அடிவாரம் குரும்பப்பட்டி வனப்பகுதிக்குள் சமூகவிரோத செயல்களில் ஈடுபட ஆயுதங்கள் தயாரிப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சேலம் வனப்பகுதிக்குள் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

அப்போது குரும்பப்பட்டி வனஉயிரியல் பூங்கா அருகே தனியாக வீடு எடுத்து 2 இளைஞர்கள் நாட்டு வெடிகுண்டுகள், நாட்டுத் துப்பாக்கிகள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை தயாரிக்க சிறிய ஆலை நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 2 இளைஞர்களையும் கைது காவல்துறையினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் கொள்ளை கும்பலுக்கு வழங்குவதற்காக தயாரிக்கப்பட்டதா அல்லது இவர்களே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட தயாரிக்கப்பட்டதா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.       

Related Stories: