ராமநாதபுரம்: இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளை மீட்டு தரக்கோரி ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். கடந்த 2018ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை ராமேஸ்வரம், மண்டபம், ஜகதாபட்டினம், கோட்டைபட்டினம், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதிகளை சேர்ந்த மீனவர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. இந்த விசைப்படகு மற்றும் நாட்டு படகுகளை மீட்டுத்தரகோரி மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். மேலும் டீசல் விலையை குறைக்க கோரிக்கை விடுத்தார்கள்.