புதுடெல்லி: இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த பெகாசஸ் மென்பொருள் மூலம் அரசியல் பிரபலங்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் உள்பட பலரது தொலை பேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவ்விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் பல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஹிமா ஹோலி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. பெகாசஸ் விவகாரத்தில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையில், உறுப்பினர்களாக அலோக் ஜோஷி மற்றும் சந்தீப் ஓபராய் நியமிக்கப்பட்டனர். இந்த குழு பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தது.