விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள்-வனத்துறையினர் அழைப்பு

அரூர் : அரூர் வனச்சரகம் சார்பில், பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் விவசாய நிலங்கள், பொது இடங்களில் மரக்கன்றுகளை நட தேக்கு, செம்மரம், மகாகனி, நாவல், இலுப்பை, ஈட்டி, வேம்பு, புங்கன், ஆயா, மலைவேம்பு, நீர்மருது, பலா, நெல்லி உள்ளிட்ட மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படவுள்ளது.

பருவமழை காலத்தில் மரக்கன்றுகள் நடவு செய்ய விருப்பம் உள்ளவர்கள் 94424 87026, 96887 71072 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு, முன்பதிவு செய்து கொள்ளலாம். ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் 200 மரக்கன்றுகள் நடவுசெய்ய முடியும். மரக்கன்றுகள் பெற விரும்பும் விவசாயிகள் சர்வே எண், ஆதார் எண் உள்ளிட்டவற்றை கொண்டு வரவேண்டும் என அரூர் வனசரக அலுவலர் நீலகண்டன் தெரிவித்துள்ளார்.

Related Stories: