தொலைக்காட்சி பெண் தொகுப்பாளர்கள் முகங்களை மறைக்க வேண்டும் : தாலிபான்களின் உத்தரவால் ஆப்கானிஸ்தானில் பரபரப்பு!!

காபூல் : ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து தொலைக்காட்சிகளிலும் பெண் தொகுப்பாளர்கள் மற்றும் அறிவிப்பாளர்கள் திரையில் தோன்றும் போது முகங்களை கட்டாயம் மறைக்க வேண்டும் என்று தாலிபான்கள் உத்தரவு பிறப்பித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை அன்று தாலிபான்கள் இந்த ஆணையை பிறப்பித்துள்ளனர். ஆப்கானில் உள்ள அனைத்து பெண்களும் பொது இடங்களில் முகத்திரை அணிய வேண்டும் என்றும் அவ்வாறு அணிய மறுத்தால் தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்றும் 2 வாரங்களுக்கு முன்பு தாலிபான்கள் உத்தரவிட்டு இருந்தார்கள்.

இதற்கு ஆப்கானில் உள்ள மகளிர் அமைப்பினர் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், தொலைக்காட்சிகளில் பெண் தொகுப்பாளர்கள் மற்றும் அறிவிப்பாளர்கள் திரையில் தோன்றும் போது, முகத்தினை கட்டாயம் மறைக்க வேண்டும் என்று புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தாலிபான்களின் நகல் அனைத்து தொலைக்காட்சிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தாலிபான்களின் இந்த திடீர் உத்தரவால் அதிர்ச்சி அடைந்துள்ளதாக காபூல் தொலைக்காட்சிகளில் பணியாற்றி வரும் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆப்கானில் தாலிபான்கள் தன்வசப்படுத்தியதில் இருந்து பெண்கள் மீதான கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. ஆண் துணை இல்லாமல் பெண்கள் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான மேல்நிலை பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

Related Stories: