கொள்ளிடம் : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே திருமயிலாடி கிராமத்தில் வேளாண்மை துறை அட்மா திட்டத்தின் கீழ் காய்கறி சாகுபடியில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பண்ணைப் பள்ளி பயிற்சி நேற்று நடைபெற்றது. கொள்ளிடம் வேளாண் உதவி இயக்குனர் எழில்ராஜா தலைமை வகித்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் அரவிந்தன் வரவேற்றார்.மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சேகர் கலந்து கொண்டு தொழில்நுட்பம் மற்றும் திட்ட விளக்க உரையாற்றினார். கொள்ளிடம் தோட்டக்கலை அலுவலர் சுகன்யா,காய்கறி சாகுபடி முக்கியத்துவம் என்ற தலைப்பில் பேசினார்.