மானூர் : மானூர் அருகே நள்ளிரவில் பண்ணையில் புகுந்த வெறிநாய் கூட்டம் கடித்து குதறியதில் 34 ஆடுகள் பலியானது. மானூர் அருகே அழகியபாண்டியபுரம் சுப்பையாபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (41). விவசாயியான இவர், ஊருக்கு தெற்கே உள்ள கோழிப்பண்ணையை குத்தகைக்கு எடுத்து ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 50க்கும் மேற்பட்ட ஆடுகள், 10 குட்டி ஆடுகள் மற்றும் கோழிகள் பண்ணையில் இருந்தன. நள்ளிரவில் பண்ணைக்குள் புகுந்த வெறிநாய் கூட்டம், அங்கிருந்த ஆடுகளை கடித்து குதறியது. இதில் 34 ஆடுகள் சம்பவ இடத்திலேயே இறந்தன.