நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 5 கிலோ மைக்ரோ ஜெராக்ஸ் பிட் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் 11 பேர் தேர்வு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி அரசு பொதுத்தேர்வுகள் கடந்த இரு வாரத்துக்கு முன் துவங்கி நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 80க்கும் மேற்பட்ட மையங்களில் பொதுத்தேர்வு நடக்கிறது. இந்த நிலையில் கடந்த 17ம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கு கணிதத்தேர்வு நடைபெற்றது. அப்போது, கொல்லிமலை, குமாரபாளையம், பள்ளிபாளையம் உள்ளிட்ட தேர்வு மையங்களில் பறக்கும் படையினர் மாணவ, மாணவியர்களிடம் இருந்து சுமார் 5 கிலோ மைக்ரோ ஜெராக்ஸ் பிட் பேப்பர்களை பறிமுதல் செய்தனர்.