கோவை: மேட்டுப்பாளையத்தில் முதுகலை நீட் தேர்வுக்கு தயாராகி வந்த பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேட்டுப்பாளையம் கூட்டுறவு காலனியை சேர்ந்த அபிஷேக் என்பவருக்கும், காட்டூரை சேர்ந்த ராசி என்பவருக்கும் 6 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. கடந்த 2020ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து முடித்து டாக்டர் பட்டம் பெற்ற ராசி, முதுகலை நீட் தேர்வு எழுத தயாராகி வந்தார். இதற்காக மேட்டுப்பாளையம் காட்டூர் பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தங்கி படித்து வந்த ராசி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.