நீலகிரி : உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 124வது மலர் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் காய்கறிகள், பழங்களால் உருவாக்கப்பட்ட சிற்பங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். கோடை சீசன் கலைக்கட்டியுள்ள நிலையில், மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் உதகையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு மலர் கண்காட்சி இன்று தொடங்கியுள்ளது. உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இன்று தொடங்கிய மலர் கண்காட்சி 5 நாட்களுக்கு நடைபெறுகிறது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு வகைகளை கொண்ட 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இதில் உதகை நகரம் தோன்றி 200 வருடங்கள் ஆனதை குறிக்கும் வகையில், 200 என்ற வாசகம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.