கீவ்: ரஷ்யாவின் படைகள் கிழக்கு உக்ரைனில் உள்ள நகரங்கள் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் அங்கிருந்து பொதுமக்கள் முழு வீச்சில் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது 2 மாதங்களுக்கும் மேலாக ரஷ்யா, ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கீவ், கார்க்கிவ், சுமி உள்ளிட்ட நகரங்கள், ரஷ்ய தாக்குதலில் கான்கிரீட் குவியல்களாக காட்சியளிக்கின்றன. உக்ரைன் ராணுவத்திற்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட கவச வாகனங்களை அழித்திருப்பதாக அந்நாடு கூறியுள்ளது. தொடர்ந்து, டான்பான்ஸ் பிராந்தியத்தின் டொனெட்ஸ்க், லூஹான்ஸ்க் உள்ளிட்ட பகுதிகளில் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிந்து வருகின்றன.