சென்னை: உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற நிகாத் ஜரீனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் தங்கப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார். துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் 12வது மகளிர் குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் பிரிவு 52 கிலோ உடல் எடை பிரிவின் இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் தாய்லாந்து வீராங்கனை ஜித் போங்குடன் பலப்பரீட்சை நடத்தினார். தொடக்கம் முதலே எதிராலி மீது அதிரடி தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய நிகாத் ஜரீன், 5-0 என்ற கணக்கில் வென்று தங்க பதக்கத்தை தட்டி சென்றார்.