கேஜி கண்டிகை அருகே கார்கள் மோதியதில் எல்ஐசி உதவி மேனேஜர் பலி

திருத்தணி:  வேலூர் மாவட்டம் குடியாத்தம் காந்தி நகரில்  வசித்து வருபவர் கண்ணன்.  இவருடைய மகன் குமரேசன் (49).  இவர் திருத்தணியில் உள்ள எல்ஐசி நிறுவனத்தில் உதவி மேனேஜராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு தன்னுடைய சொந்த காரில் திருத்தணி சித்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது,  இவர் கேஜி கண்டிகை அருகே பீரகுப்பம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் இவருக்கு முன்பாக சென்ற கார் வேகத்தடை இருப்பதை பார்த்ததும்,  திடீரென அதை ஓட்டியவர் பிரேக் போட்டுள்ளார். பின்னால் காரில் வந்த குமரேசன் அந்த காரின் மீது மோதியதில், படுகாயம் அடைந்தார். குமரேசனின் அலறல் சத்தம்கேட்டு அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கிருந்த மருத்துவர்கள் அவரை பரிசோதித்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: