மும்பை: பங்குச்சந்தையில் கடும் சரிவால், முதலீட்டாளர்களுக்கு நேற்று ஒரே நாளில் ரூ.6.71 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. இந்திய பங்குச்சந்தைகள் அவ்வப்போது ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ், நேற்று முன்தினம் வர்த்தக முடிவில் 54,208.53 புள்ளிகளாக இருந்தது. நேற்று காலை வர்த்தகம் துவங்கியதும், 53,070.30 புள்ளிகள் என சரிவுடன் ஆரம்பித்தது. வர்த்தக இடையில் அதிகபட்சமாக 52,669.51 புள்ளிகள் வரை சரிந்தது. இருப்பினும் வர்த்தக முடிவில் முந்தைய நாளை விட 1,416.30 புள்ளிகள் அதாவது, 2.61 சதவீதம் சரிந்து 52,792.23 ஆக இருந்தது. இதுபோல், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிப்டி, 430.90 புள்ளிகள் அதாவது 2.65 சதவீதம் சரிவுடன் முடிவடைந்தது.