யார் ஆட்சியில் தமிழகம் உயர் கல்வியில் சிறந்து விளங்கியது: ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

சென்னை: தமிழகத்தில் உயர் கல்வியில் சிறந்து விளங்கியது அதிமுக ஆட்சியில்தான் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில்தான் தமிழ்நாடு உயர் கல்வியில் சிறந்து விளங்கியது. அதிமுக ஆட்சி காலத்தில் தான் 22 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டன. ஓரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகளுக்கான அனுமதியை பெற்ற பெருமை அதிமுக அரசையே சாரும்.

2010-2011ம் ஆண்டில் 32.9 விழுக்காடாக இருந்த மாணவர் சேர்க்கை 2019-2020-ல்  51.4 விழுக்காடாக உயர்ந்து இருக்கிறது. ஆனால் தற்போதைய ஆட்சி காலம் உயர் கல்வியின் பொற்காலம் என முதல்வர் சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலே கூறி இருக்கிறார். அதிமுகவின் சாதனையை மறைக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வியாக இருந்தாலும் சரி, உயர் கல்வியாக இருந்தாலும் சரி, அனைத்திலும் சாதனை படைத்த ஆட்சி அதிமுக ஆட்சிதான் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன்.  இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: