கல்குவாரியில் சிக்கி 3 பேர் பலி எதிரொலி நெல்லை கனிமவளத்துறை உதவி இயக்குநர் சஸ்பெண்ட்

நெல்லை: நெல்லை அருகே  அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் கடந்த 14ம் தேதி நள்ளிரவில் ராட்சத பாறைகள் சரிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் முருகன் (32), விஜயன் (25) ஆகிய இருவர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். டிரைவர் செல்வம் (25), முருகன் (25), செல்வகுமார் (40) ஆகிய மூவர் பலியாகினர். லாரி  டிரைவர் ராஜேந்திரனை (42) தேடும் பணி நடக்கிறது.

இது தொடர்பாக நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு அளித்த பேட்டியில், நெல்லை மாவட்ட கனிமம் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர்  வினோத், தமிழக அரசால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கல்குவாரி உரிமம்  தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்றார்.எஸ்பி சரவணன் அளித்த பேட்டியில் கல்குவாரி உரிமையாளரை 3 தனிப்படைகள் தேடி வருகின்றனர். அவரது  சொத்துக்களையும் முடக்க  நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.

Related Stories: