திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மூணாறில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்த கார் கட்டுப்பாட்டை இழந்து 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 மாத குழந்தை உட்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 9 பேர் அடங்கிய சுற்றுலாப் பயணிகள் குழுவினர் இடுக்கி மாவட்டம் மூணாறுக்கு சுற்றுலா வந்தனர். இன்று காலை 7 மணியளவில் இவர்களது கார் தேவிகுளம் கேப் ரோட்டில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.