டிராக்டர் கவிழ்ந்து 5 பேர் நசுங்கி பலி

திருமலை: தெலங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டத்தின் கானாபுரம் மண்டலம் பரசா தாண்டா கிராமத்தை சேர்ந்த 9 பேர் உறவினர் இல்ல திருமணத்திற்கான பொருட்களை வாங்கி வருவதற்காக டிராக்டரில் நேற்று  நர்சம்பேட்டைக்கு புறப்பட்டனர். அசோக் நகர் புறநகர் பகுதியில் ஏரிக்கரை மேல் டிராக்டர் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில் வந்த ஒரு வாகனத்துக்கு வழிவிட  முயன்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த ​​டிராக்டர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் டிராக்டரில் பயணம் செய்த சாந்தம்மா(40), சீதா(45), கூகுலோத்து சுவாமி(48), ஜாடோட் கோவிந்த்(65), ஜாடோட் புச்சம்மா (60) ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4பேர் படுகாயமடைந்தனர். இதைபார்த்த அப்பகுதி மக்கள் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக நர்சம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தகவலறிந்த நர்சம்பேட்டை போலீசார் விரைந்து வந்து சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணத்திற்காக பொருட்கள் வாங்க சென்றபோது டிராக்டர் கவிழ்ந்ததில் 5 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: